கடவுள்(இறைவன்) இருக்கிறானா?

இருக்கிறான் என்று இறை-நம்பிக்கை உள்ளவர்களும், இல்லை என்று இறை-மறுப்பாளர்களும்,‘கடவுள் இருப்பதும், இல்லை என்பதும் கதைக்கு உதவாத வெறும் பேச்சு’ என்று உலகாதாயம் பேசுபவர்களும் மூன்று விதத்தில் விடை சொல்வார்கள்.

ஆனால், ‘உயிர்கள்’ உண்டா என்று யாரும் ஐயம் எழுப்புவது இல்லை!

உடல்களில் இயங்கும்போது, பல பெயர்கள் கொண்டு விளங்கும் உயிருடல்கள், உயிர் நீங்கினால், அனைத்து மனித உடல்களுக்கும் ‘பிணம்’ என்ற ஒரே பெயர்தான்.

ஐயா, ஐயா என்று வாஞ்சையாக அழைத்தவர்கள், உயிருடலில் இருந்து, ‘ஐயா’ என்ற உயிர் நீங்கிவிட்டால், ‘ஐயாவை எப்போது எடுப்பார்கள்?’ என்று யாரும் கேட்பதில்லை;
மாறாக, “பிணத்தை எப்போது எடுப்பார்கள்?” என்றுதான் கேள்வி வருவதை சாதாரணமாகக் காண்கிறோம்.

உயிர் நீங்கிய உடல் எரிக்கப்பட்டோ – புதைக்கப்பட்டோ சிதைவுறும்.

எனவே, உயிர் என்ற ஒன்றின் இருப்பை, எவரும் மறுப்பதில்லை. ஆயினும், உலகோர் அனைவரும், உடலை விட்டு நீங்கியதும்,

  1. ‘உயிர்’ என்னவாகிறது?
  2. எங்கே போகிறது?
  3. எப்படி உடலற்ற உயிரின் வாழ்வு அமையும்?

போன்ற வினாக்களை எழுப்பிக் கொண்டதால் வந்த விளைவுகள்தாம் கடவுள்கள் – மதங்கள் – சமயங்கள் – நம்பிக்கைகள் – சாமியார்கள் – பேய்கள் – செய்வினை – மந்திரங்கள் என்ற பலவும்.

உடல் வாழ்க்கைக்கு அப்புறம், உயிரின் நிலை என்ன என்ற கேள்வியின் விளைவே பல்வேறு சமயத் தத்துவங்கள்.

எனவே, உயிர்கள் என்றால் என்ன என்ற கேள்வி, மிகவும் பொருத்தமானதே! என்றாலும், உயிர்களுக்கும், இவ்வுலகத்துக்கும், இறைவன் என்னும் தத்துவப் பொருளுக்கும் உள்ள
தொடர்புக்கான விடை காண முயல்வதே, சமயங்கள் அல்லது மதங்கள் அனைத்துக்கும் இடையே இருக்கும் பொதுவான கூறு.

எனவே, உயிர் என்றால் என்ன? என்ற கேள்விக்கு,

  1. இறைவன் என்றால் என்ன?
  2. உயிர்-உலகம்-இறைவன் இவற்றிற்கான தொடர்பு என்ன?

இணைத்தே விடை காண முயலவேண்டும்.

இறைவன், உயிர்கள், உலகம் என்ற மூன்று பொருட்களையும், அவற்றிற்கு இடையேயான உறவுகளையும் அறுதியிட்டு, வரையறை செய்த சைவ சித்தாந்தம் என்னும் தத்துவத்தின் மூலம் உங்கள் கேள்விக்கு விடை தர முயற்சிக்கிறேன்.

இப்பிரபஞ்சத்தின் ‘முப்பெரும் உண்மைகள்’ என்று மூன்று பொருட்கள் சுட்டப்படுகின்றன.

‘முப்பெரும் உண்மைகள்’

  1. இறைவன்(பதி)
  2. உயிர்கள்(பசு)
  3. தளைகள்(பாசம்)

எனப்படும்.

அகன்று எல்லையில்லாமல் விரிந்துகொண்டே செல்லும் (ever expanding universe) பரவெளியின் அனைத்தும் இம்மூன்று பொருட்களில் அடக்கம் என்கிறது சைவசித்தாந்தம் என்னும் சிவனியத்தத்துவம்.
உயிர்கள்(பசுக்கள்) இயல்பு!
உயிர்கள் அறிவுப்பொருட்கள்!

உயிர்கள் சார்ந்தவண்ணம் ஆதல் தன்மை கொண்டவை!(உயிரைப் பச்சோந்தி என்கிறீர்களா? ஆம், கிட்டத்தட்ட அப்படித்தான். உடலைச் சார்ந்து இருப்பதால், தான் என்பது உடலே என்று உணரும் உயிர்; உடலுக்கு நோய் வரும்போது, உயிர் அந்நோய் தனக்கே வந்தது என்று மயங்கும்.உடல்-மனம் மகிழ்வாக/சோகமாக இருக்கும்போது, உலகமே மகிழ்வாக /சோகமாக இருப்பதுபோல் எண்ணும்.அப்படியானால், உயிர் வேறு-உடல் வேறா? ஆம், என் கை, என் கால், என் உடலுக்கு முடியவில்லை என்று சொல்வதெல்லாம் என்னவாம்? உயிர் வேறு, உடல் வேறு என்பதால்தானே என் உடம்புக்கு முடியவில்லை என்கிறோம்!)

உயிர்கள் அறிவித்தால் மட்டுமே அறிபவை! (அப்படியா? சரியாகத்தான் படுகிறது. உயிர் அறிந்ததெல்லாம், கண்டும், கேட்டும், சுவைத்தும்,நுகர்ந்தும், தொட்டுஉணர்ந்தும் அறிந்தவை அல்லவா? அப்படியானால், எனது அறிவுக்கு, என் உடல்தான் மூலக்கருவியா? புரிந்தால் சரிதான். உடல் சார்ந்த மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்றெல்லாம் இன்னும் சில உண்டு. பின்னர் குழம்பி, விளக்கித் தெளியலாம்.)

உயிர்கள் என்றும் உள்ளவை! (அப்படியானால், உயிர் போகிறது; சாவு வருகிறது எப்படி? பின்னர் விளக்குவோம்);

உயிர்கள் யாராலும் படைக்கப்படாதவை ! (கடவுள் படைக்காததா உயிர்கள்? தந்தை பெரியார் பேச்சை வைத்து காமெடி ஒன்றும் செய்யவில்லையே? உறுதியாக இல்லை. சைவசித்தாந்தத் தத்துவம் சொல்வதைத்தான் சொல்கிறேன்);

  1. உயிர்கள் எண்ணற்றவை! (infinity – முடிவிலி என்று கணிதத்தில் சொல்வோமே, அதேதான். -∞ to +∞)
  2. இதுவரை எத்தனை உயிர்கள் உடல்பிறவிகள் பிறந்து-இறந்துள்ளன? எண்ணற்றவை. (minus infinity: -∞)
  3. இன்னும் எத்தனை உயிர்கள் பிறக்க இருக்கின்றன? எண்ணற்றவை. (plus infinity:+∞)
  4. ஒரு உயிர் எத்தனை உடல் பிறவிகள் எடுக்கவேண்டும்? அந்தந்த உயிரின் வினைப்பயன்களைப் பொறுத்தது. (அப்ப, ஏழு பிறவி என்பதெல்லாம் பொய்யா? அது ஏழு பிறவி இல்லை. எழு பிறவி! அதாவது, வினைப்பயன்களுக்கு ஏற்றவாறு எழுகின்ற பல பிறவிகள். )
  5. உயிர்கள், தன் இயல்பில், அறியாமை(ஆணவம்) என்னும் நுண்ணிய சடப்பொருளால் மறைக்கப்பட்டு, எங்கும் நிறையும் தன்மை இல்லாமல், கட்டுப்பட்டு மயங்கிக் கிடக்கும் குற்றம் உடையவை; அறிவித்தால் அறிபவை.

உயிர் எவ்வாறு இந்த உடல்-பிறவிக்கு வந்தது?
இறைவனால் என்கிறது சைவ சித்தாந்தம். இயற்கையால் என்கிறது அறிவியல்.

இனி, இறைவன் குறித்த கேள்விக்குச் செல்லலாம்.
இறைவன்(பதி) இயல்பு
இறைவன் (பதி) – ஒருவனே – என்றும் உள்ளவன் – தன் இயல்பில், யாரும் அறிவிக்காமல் அறியும் ஆற்றல் கொண்ட அறிவே வடிவானவன் – எல்லையற்ற ஆற்றல் கொண்டவன்.
கருணையே வடிவானவன் – வேண்டும்போது, வேண்டும் உருவம் கொள்ளும் ஆற்றல் கொண்டவன் – பொறிகள் புலன்கள் கொண்ட உடல்பிறவிக்கு வாராதவன் – எங்கும் நிறைந்தவன் –

தளைகள்(பாசம்) இயல்பு
தளைகள்(பாசம்) என்றும் உள்ள அறிவற்ற சடப்பொருளாகிய குற்றம் ஆகும்.
பாசம் என்ற தளை, ஆணவம், கன்மம், மாயை என்ற மூன்று வடிவங்களில் காணப்படும் – செம்புக்குக் களிம்பு போல் தன்னியல்பில், ஆணவம் உயிர்களைக் கட்டுவிக்கும் ஆற்றல் கொண்டவை.

உடலால் கட்டப்பட்ட உயிர், தன் உடலே தான் என்று கருதுவதை முன்னரே பார்த்தோம்.
இறைவன் அணுகினால், தளைகள்(பாசங்கள்) உயிர்களை விட்டு நீங்கும் இயல்பின.(ஆணவம், கன்மம், மாயை என்னும் மூவகைத் தளைகள் (பாசங்கள்-3) குறித்துப் பிற்பகுதியில் விரிவாக விளக்கியுள்ளேன்)

உயிர்கள் பால் இறைவனின் கருணை!

எல்லையற்ற கருணையாளன் இறைவன்,
• அறியாமையால் கட்டுண்ட உயிர்கள் மீது கொண்ட அன்பால், அவற்றைப் பிடித்த அறியாமை (ஆணவம்) நீங்க,
• உலகங்களைப் படைத்து, உலகங்களில் இயங்கும் உடல்களைப் படைத்து,
• அவ்வுடல்களில் உயிர்கள், தாமே இயங்கி, உடல்களில் பொருந்தியுள்ள பொறி-புலன்கள் வாயிலாக,
• புற உலகையும், பின்னர், தன்னை அறியும் அக-உலகையும் அறியும்படி
வாய்ப்புகள் வழங்குகிறான்.
திரோதான சக்தியும், அருட்சக்தியும்!
இப்படியான வாழ்க்கை முறையில், இறைவன் உயிர்களுடன் மறைந்து இருப்பது திரோதானம்(மறைப்புச்சக்தி) எனப்படும்.
தன்னை அறியும் உயிர்கள், தம் தலைவனாம் இறைவனை அறிதல் வேண்டித் தொழும்போது, இறைவன் வெளிப்பட்டுத் தோன்றி, உயிர்களின் இயல்பான முற்றறிவு என்னும் ஞானத்தை அருள்வான்; சீவன் என்னும் உயிர் சிவமாகும் வேளையில், அதற்கு, உடல் கருவி தேவை நீங்கும். சிவமாகும்.
அவ்வாறு,இறைவனால் அறியாமை நீங்கப் பெற்ற உயிர்கள், தம் தலைவன் இறைவனை அறிந்து, எங்கும் நிறையும் (வியாபகம்) சிவமாம் தன்மை பெற்று, சிவத்துடன் இரண்டறக் கலக்கும்.

இறைவன், உயிர்கள், உலகம்(இயற்கை-பேரண்டம் அனைத்தையும் உள்ளடக்கியது) என்ற மூன்று பொருட்களையும், அவற்றிற்கு இடையேயான உறவுகளையும் அறுதியிட்டு, வரையறை செய்த தத்துவமே சைவ சித்தாந்தம் எனப்படும்.

உலகம்-என்பது, மூன்று பொருட்களை ஒண்ணாக்கிச் சொன்னது என்பதை நினைவில் கொள்க!

பஞ்ச பூதங்கள்
முதலாவது செய்தி: உயிரற்ற சடப்பொருள் உலகம் என்பது, நிலம், நீர், தீ, காற்று, வெளி (வானம்) என்ற ஐந்து பொருட்களும் கொண்ட கலவை. ‘பஞ்ச பூதங்கள்’

ஐந்து அறியும் கருவிகள் – புலன்கள்

உயிர் என்ற அறிவுப்பொருளுக்கு, அறிவு கொடுக்கும் கருவியாக, இறைவனால் கொடுக்கப்பட்ட கருவி(Gadget)தான் நம் உடம்பு என்னும் உடல் – அதில், Five sensors-களும், Five senses-களும் உண்டு. (உடல்(மெய்) -touch sensor(தொட்டால் உணர்தல் கருவி, touch sense), வாய்-நாக்கு -taste sensor(சுவை உணரும் கருவி, taste sense), கண் – vision sensor(ஒளி பார்க்கும் பார்வைக் கருவி, vision sense), மூக்கு – sniffing sensor(மோப்பக் கருவி, sniffing sense), செவி – hearing sensor(ஒலி கேட்கும் கருவி, hearing sense)
நன்றாக சிந்தித்துப் பாருங்கள்! நமது அறிவு-என்பது இந்த ஐந்து அறியும் கருவிகள் – புலன்கள் இல்லாமல் நடக்குமா-என்று.

ஐந்து நுண்ணிய புலன்கள் (தன்மாத்திரைகள்)
இந்த ஐந்து அறியும் கருவிகளான மெய், வாய், கண், மூக்கு, செவி என்ற பொறிகளுக்கும், சுவை(த்தல்), ஒளி(பார்த்தல்), ஊறு(உணர்தல்), நாற்றம்(நுகர்தல்), ஓசை(கேட்டல்) என்னும் ஐந்து நுட்பமான புலன்கள் உண்டு.
ஐந்து தொழிற் கருவிகள் (கன்மேந்திரியங்கள்)
வாய் (பேச்சு/வாக்கு), கை(பாணி), கால்(பாதம்), எருவாய்(பாயு), கருவாய்(உபத்தம்) மனம் – புத்தி – சித்தம் -அகங்காரம்!

இந்த ஐந்து அறிகருவிகளையும், ஐந்து புலன்களையும் ஒருங்கிணைத்து செயலாற்றும் மனம் என்னும் கருவி, தகவல்களை மூளைக்கு அனுப்புகிறது.
மூளைக்குள் வந்த தகவல்கள் யாவை என்று ஏற்கனவே மூளையில் உள்ள தகவல்களுடன் ஒப்பிட்டு அறியும் கருவி ‘புத்தி’ எனப்படும். (இதுவும் வடமொழி சொல்லே!)
தீ எரிவதை, கண் என்ற பொறி கொண்டு பார்த்த மனம் தந்த தகவலை, ஏற்கனவே மூளையில் பதிந்துள்ள தகவலுடன் ஒப்பிட்டு, தீதான் என்று புத்தி சொல்லியதும்,

  1. தீயை நீரைக் கொண்டு அணைக்கும் செயலைச் செய்யலாம் என்று பரிந்துரை செய்கிறது, சித்தம் என்னும் கருவி;
  2. ‘ஆம், நான் தீயை நீரைக் கொண்டு அணைக்கப் போகிறேன் என்று ‘முடிவு செய்கிறது’ அகங்காரம் என்னும் கருவி;
  3. ‘நீர் இருக்கும் தொட்டியை நோக்கி ஓடு’ என்று காலுக்குக் கட்டளை இடுகிறது; ‘வாளியை எடுத்து, நீரை முகர்ந்து ஊற்று’ என்று கைகளுக்குக் கட்டளை இடுகின்றது.
  4. ‘சேகர், நீயும் இன்னொரு வாளியில் நீரை எடுத்து ஊற்று’ என்று வாய்க்குக் கட்டளை இடுகின்றது;
  5. இப்படி, இரண்டு கைகள், இரண்டு கால்கள், ஒரு வாய், கழிவுகளை வெளியேற்றும் எருவாய், விந்து-நாதம் கருவாய் ஆகிய ஐந்தும் ஏவல் வேலை செய்யும் இயந்திரங்கள் என்பதால்,வேலை-இயந்திரங்கள் – தொழிற்கருவிகள் ஐந்து என்கிறோம். (வடமொழியில், கர்மேந்திரியங்கள் ஐந்து)

இவ்றோடு மனம், புத்தி, சித்தம், அகங்காரம் (அந்தகரணங்கள்)என்னும் நான்கு தத்துவங்கள்.

சைவசித்தாந்தம் சொல்லும் 36 தத்துவங்கள்!

ஐந்து பருப்பொருட்கள்(பூதங்கள்), ஐந்து அறி-கருவிகள், ஐந்து அறி-புலன்கள், ஐந்து தொழிற்கருவிகள், நான்கு அந்தகரணங்கள் என்னும் இந்த இருபத்துநான்கு தத்துவங்களோடு வித்தியா தத்துவங்கள் 7, சிவதத்துவங்கள் 5 கூட்டி வரும் 12 தத்துவங்களையும் (பின்னர் விளக்குகிறேன்; இப்போதைக்கு, பதி,பசு,பாசம் அறிவோம்) சேர்த்து 36 தத்துவங்கள் என்பது சைவ சமய, சைவ சித்தாந்தத்தின் முடிபு ஆகும். (நாம் அறிந்து கொண்ட முடிபு – கொண்முடிபு)

ஆணவம், கன்மம், மாயை என்ற மூன்று வகைப் பாசங்கள்-பாசம்!

  1. உயிர்களை இயல்பாகப் பற்றியுள்ள அறியாமை (ஆணவம்),
  2. உயிர்களின் அறியாமையை(ஆணவத்தை) அகற்ற இறைவன் தந்த அறிவுக் கருவிகளான 24 தத்துவங்கள் வழியாக உயிர்கள் வினைகள் செய்து செயலாற்றுவதால், விளையும் வினைப் பயன்கள் (கன்மம்/கருமம்),
  3. அறியாமை நீக்கவே, இறைவன் மாயை வழியாக, உலகம் என்னும் University-யில், உடல்-என்னும் Hostel-லில், வாழ்க்கை என்னும் 100 ஆண்டு Course படிக்க அனுப்புகிறான்.
    வந்த வேலையை விட்டுவிட்டு, உழைப்பதெல்லாம் உணவின் பொருட்டே-என்று உழல்கிறோம்!
  4. University-ல சேர்ந்தோமா, hostel-லுக்குப் போனோமா, படிச்சு முடிச்சு, Degree என்ற ஞானத்தைப் பெற்று, இறைவனுடன் இரண்டறக் கலத்தல் என்னும் நிலையான வேலைக்கு முயற்சி செய்யாமல்,
    • Hostel சாப்பாட்டையே ருசிச்சுச் சாப்பிட்டுவிட்டு,
    • hostel என்னும் உடலிலேயே வாழ என்ன வழின்னு யோசிச்சு, வாழ்க்கையை வீணாக்கி, வினையை சம்பாதிச்சு,
    • fail-ஆகி, கருமவினைகளைத் தீர்க்க மீண்டும், மீண்டும் University என்னும் உலகத்துக்கு வந்து,
    • Hostel-என்னும் உடலில் மீண்டும் நுழைந்து, மீண்டும் fail ஆகி, சுத்திக்கிட்டே இருக்கோம்.

நாம இந்த உலகத்துக்கு வந்த வேலையைப் பார்க்காமல், அறியாமை என்னும் ஆணவத்தால், வினைகளை ஈட்டி, மீண்டும், மாயையால், பிறந்து, இறந்து உழல்கிறோம்.
இறைவனை அறியும்முழுமையான அறிவே முழு விடுதலை!

இந்த அறியாமை(ஆணவம்), வினைகள்(கன்மம்) காரணங்களாக,

  1. மீண்டும் பாசம் என்னும் ஆணவம், கன்மம், மாயையில் சிக்காமல் விடுபட,
  2. மனிதன் முயற்சி செய்து, இறைவனிடம் அடைக்கலம் புகவேண்டும்;

சக உயிர்களுக்கும், மனிதர்களுக்கும், கருணையும், தொண்டும் செய்வோருக்கு, இறைவன் அருள்கிறான்.
இறைவனுடன் கலத்தலே பாசத்திலிருந்து விடுதலை பெற வழி!
அறியாமை,(ஆணவம்), நல்வினை-தீவினைகள்(கன்மம்), மாயை ஆகிய பாசத்திலிருந்து உயிர்கள் விடுதலை பெற, இறைவனை அடைவது ஒன்றே ஒரே வழி என்பதைத் திருமந்திரம் அழகாக விளக்குகிறது.

பதி பசு பாசம் எனப் பகர் மூன்றில்
பதியினைப் போல், பசு பாசம் அநாதி!
பதியினைச் சென்று அணுகாப் பதிபாசம்
பதி அணுகில் பசுபாசம் நில்லாவே!
– திருமந்திரம்.

இறைவனைப்போல் உயிர்களும் ஆதி-அந்தம் இல்லாதவை!
இறைவன்(பதி), உயிர்கள்(பசு), தளைகள்(பாசம்) என்ற மூன்றையும் குறித்துச் சொல்வதானால், இறைவனைப் போலவே, உயிர்களும், தளைகளும், தொடக்கம், முடிவு இல்லாதவை!

உயிர்கள் இறைவனுக்குச் சமமா?

  1. பாருங்கள்! இறைவனைப்போல், உயிருக்கும் தொடக்கம்-முடிவே இல்லை!
  2. அப்படியானால், நமக்கும், இறைவனுக்கும் வித்தியாசம் இல்லை என்று கருதலாம் அல்லவா?
  3. நாமும், இறைவனும் சமம்தானோ என்று தவறாகக் கருத வேண்டாம்!
  4. இதைத்தானே வேதாந்தியும் சொல்லிக் குழப்பினார் என்று நினைக்க வேண்டாம்.

அடுத்த வரியில் அழகாக விளக்குகிறார் பாருங்கள்.
இறைவனை பாசங்கள் அணுகாது!

• ஆனால், பாசம் என்னும் தளைகள், இறைவனை (என்னும் பதியினைச் சென்று) அணுகக் கூட இயலாது.
• இறைவன் பாசங்கள் அணுக முடியாத தூய முழுமையான அறிவினைக் கொண்டவன்.
(முற்றுமான அறிவைக் கொண்டவன் என்ற பொருளில், முற்றறிவன் – வாலறிவன் என்று இறைவனைச் சொல்லுவோம். அவனுக்கு, ஐம்பொறி-புலன்கள் கொண்ட உடல் தேவையற்றவன்; அனைத்தையும் உடல் இல்லாமலேயே அறிபவன்; எங்கும் நிறைந்தவன்; உங்கள் உள்ளும், என்னுள்ளும் நிறைந்தவன்)
உயிர்களின் அறியாமை மலங்கள்(பாசம்) நீக்கவே உடல்-பிறவி!
எனவே, இயல்பாகவே,

  1. அறியாமை(ஆணவம்) என்ற பாசம் பிடித்தே இருக்கும் உயிர்களின் அறியாமையைப் போக்கவே,
  2. உடல்கள் கருவிகளைத் தந்து,
  3. உலகம் என்னும் அறிவுக்கூடத்தில், உலவ விடுகிறான்;
  4. டல்கள் மூலம் அறிவு பெற்று, உடல்களை விட்டு நீங்கும்போது, முற்றறிவன் இறைவனுடன் கலந்தால், உயிர்களுக்கும் உடல்-அறிவு தேவைகள் நீங்கிவிடும்;
    பிறவிகள் நீங்கிவிடும்!
  5. பிறவி-வினை-பிறவி சுழல் நீக்கும் இறைவன்!

பிறவிகள் வினைகளால் வருகின்றன.

  1. பிறவிகளால், வினைகளை ஈட்டுகிறோம்.
  2. முட்டையிலிருந்து கோழி, கோழியிலிருந்து முட்டை என்பதுபோல், வினையால் பிறவிகள், பிறவியால் வினைகள் என்ற சுழலை உடைக்கும் வல்லமை

இறைவனை அணுகினால் மட்டுமே கிடைக்கும் என்று அறிவோம்!
இறைவன்தான் நமக்குள்ளேயே இருக்கானே! அப்ப எப்படி மும்மலங்கள் என்னும் ஆணவம், கன்மம், மாயை நம்மைப் பிடித்தன?

  1. இறைவன் எங்கும் இருப்பதுபோல், நம்முள்ளும் இருக்கிறான்;
  2. நம்முள்ளே அவன் இருந்தாலும், அவனுள்ளே நாம் கலக்கவில்லையே?
  3. அப்படி ஒருவன் நம்ப கூட இருக்கிறான்-னு நாம்தான் கண்டு கொள்வதே இல்லையே!
  4. மனிதன் எப்பவாது நம்பளக் கண்டுக்குவான்; அப்பத்தான், மனிதனை நாம் ஆட்கொள்வோம் என்று இறைவன் காத்துக்கொண்டே இருக்கிறான்.

நம்முள் இருந்தாலும், தூய உடம்பினனான இறைவனை மலங்கள் பிடிக்காது.

  1. ஆக, மும்மலங்கள்(ஆணவம், கன்மம், மாயை) என்னும் தளைகளை ஒழிக்க ஒரே வழி, இறைவனை நாம் நினைந்து அணுகினால் போதும்.
  2. இறைவனின் சந்நிதானத்தில், உயிர்களைப்(பசு) பிடித்துள்ள பசு-பாசம் நில்லாமல் ஓடிப்போகும் என்கிறார் திருமூலர்.

உயிருக்கான விளக்கத்தை சரியாக விளக்கிவிட்டேனா என்று அன்பர்கள்தான் கூற வேண்டும்!

பொதுவாக ஜோதிடப்படி, ராகுகாலம், எமகண்டத்தில் எந்தவொரு நல்ல செயலை செய்யமாட்டார்கள். ஆனால், குளிகை நேரத்தில் செய்யப்படும் எந்த காரியமும் திரும்பத் திரும்ப நடக்கும். ஆகையால், நல்ல காரியங்களுக்கு குளிகை நேரம் உகந்ததாகவும், ஈமச்சடங்கு போன்ற கெட்ட காரியங்களுக்கு குளிகை நேரம் பொருத்தமில்லாததாகவும் கருதப்படுகிறது. குளிகை நேரத்தில் ஒரு காரியத்தை தொடங்கினால், அது வளர்ந்துக்கொண்டே இருக்கும்.

குளிகையில் என்ன செய்யலாம்?

  • குளிகை நேரத்தில் சொத்து வாங்குவது
  • சுப நிகழ்வுகள்
  • கடனை திருப்பி கொடுப்பது
  • பிறந்தநாள் கொண்டாடுவது

போன்றவற்றை செய்வதால் அச்செயல்கள் எந்த தடையும் இல்லாமல் நடப்பது மட்டுமின்றி, இதுபோன்ற நல்ல நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடந்து கொண்டும் இருக்கும்.

குளிகையில் என்ன செய்யக்கூடாது?

  • அடகுவைப்பது
  • கடன் வாங்குவது
  • வீட்டை காலிசெய்வது
  • இறந்தவர் உடலை கொண்டு செல்வது
  • போன்ற விஷயங்களை குளிகை நேரத்தில் செய்யக்கூடாது.

நல்ல காரியங்களை செய்வதற்கு உகந்த குளிகை நேரத்திற்குரிய குளிகனின் பிறப்பே ஒரு நல்ல நிகழ்வை தொடங்குவதற்காகத்தான் உருவானது.

குளிகன் உருவான கதை :

ராவணனின் மனைவி மண்டோதரி, கருவுற்று நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். ராவணன் தனது குல குருவான சுக்கிராச்சாரியாரை சந்தித்து, எப்போது வேண்டுமானாலும் குழந்தை பிறக்கும் நிலையில் உள்ளது என்றும், யாராலும் வெல்ல முடியாத, அழகும், அறிவும் கொண்ட மகனே தனக்கு பிறக்க வேண்டும் என்றும், அதற்கு என்ன வழி என்றும் கேட்டார்.அதற்கு பதில் அளித்த சுக்கிராச்சாரியார், கிரகங்கள் அனைத்தும் ஒரே கட்டத்தில் இருக்கும் நேரத்தில் உனக்கு குழந்தை பிறந்தால், அந்த குழந்தை நீ விரும்பிய எல்லா சிறப்புகளும் கொண்டதாக இருக்கும் என்று யோசனை சொன்னார். உடனே, நவகிரகங்கள் அனைத்தையும் சிறைப்பிடித்து, ஒரே அறைக்குள் அடைத்துவிட்டார் ராவணன். ஒரே அறையில் இருந்த கிரகங்கள் யாவும் தவித்துப் போயினர். இந்த யோசனையை சொன்ன சுக்கிராச்சாரியாரை கடிந்து கொண்டனர். ஒரே இடத்தில் இருப்பதால் நடக்கப்போகும் தீமைகளை எண்ணி கவலை கொண்டனர்.

இதேநேரத்தில் குழந்தை பிறக்க முடியாமல் மண்டோதரி பெரும் தவிப்பில் கிடந்தார். வலி அதிகம் இருந்தபோதிலும் குழந்தை பிறக்கவே இல்லை. இந்த செய்தி நவகிரகங்களின் காதிற்கு எட்டியதும், அதற்கும் தாங்கள்தான் காரணம் என்று ராவணன் தண்டிப்பாரோ என்று அச்சம் கொண்டனர். இது குறித்து சுக்கிராச்சாரியாரிடம் ஆலோசனை கேட்டனர். இந்த சிக்கலில் இருந்து விடுபட வேண்டுமானால், உங்கள் ஒன்பது பேரை தவிர, நல்ல செயல் புரிவதற்கென்று இன்னொரு புதியவனை சிருஷ்டித்து, ஒவ்வொரு நாளிலும் ஒரு குறிப்பிட்ட நேரத்தை அவனுடைய ஆளுகைக்கு உட்பட்ட நேரமாக மாற்றிக் கொடுத்தால், உங்களுக்கு நன்மை உண்டாகும் என்றார்.

அவனை சிருஷ்டிக்கும் அதேவேளையிலேயே மண்டோதரிக்கு சுகப்பிரசவம் உண்டாகும். நீங்களும் விடுதலை ஆகலாம் என்றார். அதன்படி சனீஸ்வர பகவான் சிறையில் இருந்தபடியே தனது சக்தியால் ஜேஷ்டாதேவிக்கு ஒரு மகன் பிறக்க வழிசெய்தார். குளிகன் பிறந்த அதேநேரம் மண்டோதரிக்கும் அழகான ஒரு மகன் பிறந்தான். அவனுக்கு மேகநாதன் என்று பெயர் சூட்டினர்.தான் பிறக்கும்போதே நல்லதை நடத்தி வைத்ததால், குளிகன் நவகிரகங்களால் பாராட்டப்பட்டார். குளிகை நேரம் என்றே தினமும் பகலிலும், இரவிலும் ஒரு நாழிகை நேரம் கொடுக்கப்பட்டது. அந்த நேரம், காரிய விருத்தி நேரம் என ஆசீர்வதிக்கப்பட்டது. இதனாலேயே குளிகை நேரத்தில் செய்யப்படும் எந்த ஒரு நல்ல காரியமும் தொடர்ந்து நடைபெறும் என்று கூறப்பட்டது.

ஓம் பூர் புவஸ்ஸூவ
தத் சவிதுர்வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ யோ ந: ப்ரசோதயாத்|

காயத்திரி’ என்னும் ஒலியின் அளவைக் கொண்டு இந்த மந்திரம் இயற்றப்பட்டதால் “காயத்திரி மந்திரம்”.நமது புத்தியை இயங்கச் செய்யும் பரமாத்மாவை நாம் வணங்குவோம் என்பது சுருக்கமான பொருள்.சூரியனுடைய ஒளியை தியானிக்கின்றோம் என்பதால் கண்களை மூடிய நிலையில் சூரிய ஒளியில் நின்று இதைச் சொல்ல வேண்டும் என்பது யதார்த்தமான விஷயம்

Om Bhuur-Bhuvah Svah
Tat-Savitur-Varennyam |
Bhargo Devasya Dhiimahi
Dhiyo Yo Nah Pracodayaat ||

Full long version

Om bhUH, Om bhuvaH, Om svaH, Om mahaH, Om janaH, Om tapaH, Om satyam
Om tat savitur varenyaM, bhargo, devasya dhImahi, dhIyo yo naH, prachodayAt
Om Apo jyotiH rasoamRitaM brahma, bhur bhuvas svar Om.

மகாபாரதம்:
———————

  1. குந்தி தேவி சூரியனை தோத்திரம் செய்து கர்ணனை பெற்றாள்
  2. குந்தி தேவியும், மாத்திரியும் தேவர்களை தோத்திரம் செய்து ஐந்து பிள்ளைகளை பெற்றனர்
  3. திரெளபதிக்கு ஐவரும் புருசர்கள் ஆனார்கள்.
  4. கௌரவர்கள் நூறு பேர். அவர்கள் பிறந்த விதம்.

இவைகள் உலகியல் அறிவுக்கு பொருந்துமா? என்று கேட்டுக் கொள்கிறேன்.

மாகாபாரதம் ஊர் உண்மை ஞான பொருளின் தத்துவ கதையாகும். உண்மையாக நடந்தது அல்ல என்பது ஞானிகளின் கருத்தாகும்.

பஞ்ச பாண்டவர்கள்:
➖➖➖➖➖➖➖➖
தருமா சிந்தனை உள்ளவர்கள் ஐம்பூதத்தால் ஆன மனித தேகத்தின் கண் உள்ள ஐம்புலன்கள் ஞானேந்திரியங்கள் ஆன்ம உணர்வுள்ளவர்கள் பஞ்ச பாண்டவர்களாகும்.

திரெளபதி
➖➖➖➖
மனித தேகத்தை காக்கும் இரத்தமாகிய சக்தி, பெண் அம்சம் (குங்குமம்) என்பதாகும். இச்சக்தியைக் கொண்டு ஐம்புலன்கள் செயல்படுவதால் ஐவருக்கு பத்தினி என்ற தத்துவ கருத்தாகும்.

கண்ணன்:
➖➖➖➖
ஆன்ம அறிவு மாயன், தேர் ஓட்டி, பாண்டவர்களின் மைத்துனன், உலக உயிர்களாகிய தேர்களை வழி நடத்துபவன் என்ற தத்துவமாகும்.

துரியோதனன்:
➖➖➖➖➖
நான், எனது என்ற அகங்கார மமகாரங்களின் உருவம், அஞ்ஞானத்திற்கு அதிபதி. அறிவுக்கும், நீதிக்கும் ஊசிமுனையிடமும் கொடுக்க மறுத்தவன்.

சகுனி:
➖➖➖
கெளரவர்களின் மைத்துனன், தீவினைகளுக்கு வழிகாட்டும் வஞ்சக அமைச்சர்.

கருத்து நம் மானிட தேகத்தின்கண் அறிவுக்கும், அறியாமைக்கும், தர்மத்திற்கும், அதர்மத்திற்கும், நீதிக்கும், அநீதிக்கும், புண்ணியம், பாவம் என்ற எண்ணங்களாகிய இருவினை போர் வீர்களுக்கு இடையில் நாள் தோறும் நடக்கும் மனப்போராட்டமே பாரத போராகும். இப்போர் மானிடன் என்ற ஒருவன் இருக்கும் வரை மனதிற்கும் அறிவிற்கும் ஓயாது நடக்கின்ற போராகும்.

ஒரு புகழ் பெற்ற கோவிலில், பணியாள் ஒருவர் இருந்தார். கோவிலை பெருக்கி சுத்தம் செய்வது தான் அவரது பணி. அதை குறைவின்றி செவ்வனே செய்து வந்தார். கோவில், தன் வீடு. இரண்டும் தான் அவரது உலகம். இதை தவிர வேறொன்றும் தெரியாது.

தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து இறைவனை தரிசனம் செய்த வண்ணமிருந்தனர். ‘இறைவன் இப்படி எல்லா நேரமும் நின்றுகொண்டே இருக்கிறானே… அவனுக்கு சோர்வாக இருக்காதா?’ என்று எண்ணிய அவர் ஒரு நாள், இறைவனிடம் “எல்லா நேரமும் இப்படி நின்று கொண்டேயிருக்கிறாயே… உனக்கு பதிலாக நான் வேண்டுமானால் ஒரு நாள் நிற்கிறேன். நீ சற்று ஓய்வெடுத்துக் கொள்கிறாயா?” என்று கள்ளம் கபடமில்லாமல் கேட்க, அதற்க்கு பதிலளித்த இறைவன், “எனக்கு அதில் ஒன்றும் பிரச்னையில்லை. எனக்கு பதிலாக நீ நிற்கலாம். ஆனால் ஒரு முக்கிய நிபந்தனை. நீ என்னைப் போலவே அசையாமல் நிற்கவேண்டும். வருபவர்களை பார்த்து புன்முறுவலுடன் ஆசி வழங்கினால் போதும். யார் என்ன சொன்னாலம் கேட்டாலும் நீ பதில் சொல்லக் கூடாது. நீ ஒரு சாமி விக்ரகம் என்பதை மறந்துவிடக்கூடாது. என் மீது நம்பிக்கை வைத்து அசையாது நின்றாலே போதுமானது” என்று கூற, அதற்கு அந்த பணியாள் ஒப்புக்கொண்டார்.

அடுத்த நாள், இறைவனைப் போலவே அலங்காரம் செய்துகொண்டு, கோவில் கர்ப்ப க்ரஹத்தில் இவர் நிற்க, இறைவனோ இவரைப் போல தோற்றத்தை ஏற்று கோவிலைப் கூட்டிப் பெருக்கி சுத்தம் செய்து வந்தான். முதலில், ஒரு மிகப் பெரிய செல்வந்தன் வந்தான். தன் வியாபாரம் சிறப்பாக இருக்கவேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்தனை செய்துவிட்டு, ஒரு மிகப் பெரிய தொகையை உண்டியலில் காணிக்கையாக போட்டான். செல்லும்போது, தவறுதலாக தனது பணப்பையை அங்கு தவற விட்டுவிடுகிறான். இதை கர்ப்ப க்ரஹத்தில் இறைவன் வேடத்தில் நின்றுகொண்டிருக்கும் நம் ஹீரோ பார்க்கிறார். ஆனால், இறைவனின் நிபந்தனைப்படி அவரால் ஒன்றும் பேசமுடியவில்லை. அப்படியே அசையாது நிற்கிறார்.

சற்று நேரம் கழித்து ஒரு பரம ஏழை அங்கு வந்தான். அவனிடம் உண்டியலில் போட ஒரே ஒரு ரூபாய் மட்டுமே இருந்தது. “என்னால் இது மட்டும் தான் உனக்கு தர முடிந்தது. என்னை மன்னித்துவிடு இறைவா. என்றும் போல, என்னை ரட்சிக்கவேண்டும். எனக்கும் என் குடும்பத்தினருக்கும் அடிப்படை தேவைகள் கூட கிடைப்பது கஷ்டமாக இருக்கிறது. எல்லாவற்றையும் உன்னிடமே விட்டுவிடுகிறேன். நீயாக பார்த்து ஏதாவது எனக்கு ஒரு வழி சொல்” என்று மனமுருக கண்களை மூடி நம்பிக்கையுடன் பிரார்த்தனை செய்துகொண்டான்.

சில வினாடிகள் கழித்து கண்ணை திறந்தவனுக்கு எதிரே, அந்த செல்வந்தன் தவறவிட்ட பணப்பை கண்ணில் பட்டது. உள்ளே பணத்தை தவிர தங்கக் காசுகளும் சில வைரங்களும் கூட இருந்தன. இறைவன் தனக்கே தன் பிரார்த்தனைக்கு செவிமெடுத்து அதை அளித்திருக்கிறான் என்றெண்ணி, அப்பாவித்தனமாக அதை எடுத்துக்கொள்கிறான்.

இறைவன் வேடத்தில் நின்றுகொண்டிருந்த, அந்த சேவகரால் இப்போதும் எதுவும் சொல்லமுடியவில்லை. அதே புன்சிரிப்புடன் நின்றுகொண்டிருந்தார்.
சிறிது நேரம் கழித்து, ஒரு கப்பல் வியாபாரி வந்தான். ஒரு நீண்ட தூர பயணமாக கப்பலில் அன்று அவன் செல்லவிருப்பதால், இறைவனை தரிசித்து அவர் ஆசி பெற வேண்டி வந்தான். இறைவனிடம் பிரார்த்தனை செய்தான். அந்த நேரம் பார்த்து, பணப் பையை தொலைத்த செல்வந்தன், காவலர்களுடன் திரும்ப கோவிலுக்கு வந்தான்.

அங்கு, கப்பல் வியாபாரி பிரார்த்தனை செய்வதை பார்த்து, “இவர் தான் என் பணப்பையை எடுத்திருக்க வேண்டும். இவரை பிடித்து விசாரியுங்கள்” என்று காவலர்களிடம் கூற, காவலர்களும் அந்த கப்பல் வியாபாரியை பிடித்து செல்கிறார்கள். “இறைவா என் பணத்தை அபகரித்தவரை அடையாளம் காட்டியமைக்கு நன்றி!” என்று அந்த செல்வந்தன் இறைவனைப் பார்த்து நன்றி கூறிவிட்டு செல்ல, நம் ஹீரோ உடனே இறைவனை நினைத்துக்கொள்கிறார். “இது நியாயமா? அப்பாவி ஒருவன் தண்டிக்கப்படலாமா? இனியும் என்னால் சும்மாயிருக்க முடியாது…” என்று கூறி, “கப்பல் வியாபாரி திருடவில்லை. தவறு அவர் மீது இல்லை!” என்று இறைவன் வேடத்தில் நின்றிருந்த நம் பணியாள் நடந்த உண்மைகளை அனைவரிடமும் சொல்கிறார். உடனே, செல்வந்தரும், கப்பல் வியாபாரி இருவரும் நெகிழ்ந்து போய், உண்மையை கூறியமைக்கு இறைவனிடம் நன்றி சொல்லிவிட்டு செல்கின்றனர்.

இரவு வருகிறது. கோவில் நடை சாத்தப்படுகிறது. இறைவன் வருகிறார். மூலஸ்தானத்தில் நின்றுகொண்டிருந்த நம் பணியாளிடம் இன்றைய பொழுது எப்படியிருந்தது என்று கேட்கிறார். “மிகவும் கடினமாக இருந்தது. உன் வேலை எத்தனை கஷ்டம் என்பதை புரிந்துகொண்டேன். ஆனால் ஒரு நல்ல காரியம் செய்தேன்….” என்று காலை கோவிலில் நடந்ததை கூறினான்.
இறைவனோ இதே கேட்டவுடன் மிகவும் அதிருப்தியடைந்தார். என்னடா இது, நம்மை பாராட்டுவான் என்று நினைத்தால் இப்படி கோபித்து கொள்கிறானே என்று பணியாள் துணுக்குற்றான்.

“நாம் ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்தப்படி நீ ஏன் நடந்துகொள்ளவில்லை….? என்ன நடந்தாலும் பேசக்கூடாது, அசையக்கூடாது என்ற என் நிபந்தனைகளை நீ ஏன் மீறினாய்….? உனக்கு என் மீது நம்பிக்கை இல்லை. இங்கு வருபவர்களது மனநிலையை அறியாதவனா நான்? ”

இறைவன் தொடர்ந்து பேசலானான்…. “செல்வந்தன் அளித்த காணிக்கை, தவறான வழியில் சம்பாதித்தது. அது அவனிடத்தில் மொத்தமாக உள்ள செல்வத்தில் ஒரு சிறு துளி தான். ஒரு துளியை எனக்கு காணிக்கையாக அளித்துவிட்டு, நான் பதிலுக்கு அவனுக்கு எண்ணற்றவைகளை தரவேண்டும் என்று அவன் எதிர்பார்க்கிறான். ஆனால் அந்த ஏழை கொடுத்ததோ அவனிடம் எஞ்சியிருந்த இருந்த ஒரே ஒரு ரூபாய் தான். இருப்பினும் என் மீது முழு நம்பிக்கை வைத்து என்னை வணங்க வந்தான். அன்போடு அதை கொடுத்தான்.

இந்த சம்பவத்தில், கப்பல் வியாபாரியின் தவறு எதுவும் இல்லை. இருந்தாலும், இன்றைக்கு அவன் திட்டமிட்டபடி கப்பல் பயணம் செய்தால், விபத்தை சந்திக்க நேரிடும். புயலில் தாக்குண்டு அவனும் அவன் கப்பலும் காணாமல் போயிருப்பார்கள். அதிலிருந்து அவனை காக்கவே அவனை தற்காலிகமாக திருட்டு பட்டம் சுமக்க செய்து சிறைக்கு அனுப்ப நினைத்தேன். அந்த ஏழைக்கு அந்த பணமுடிப்பு போய் சேரவேண்டியது சரி தான். அவன் அதை நான் கொடுத்ததாக எண்ணி போற்றுவான்.

இதன் மூலம் அந்த செல்வந்தனின் கர்மா ஓரளவாவது குறைக்கப்படும். அவன் பாவப் பலன்கள் துளியாவது குறையும். இப்படி ஒரே நேரத்தில் அனைவரையும் நான் ரட்சிக்க நினைத்தேன். ஆனால், நீயோ என் எண்ணங்கள் எல்லாம் உனக்கு தெரியுமென்று நினைத்து, உன் எண்ணங்களை செயல்படுத்தி அனைத்தையும் பாழ்படுத்திவிட்டாய்.” என்றான் இறைவன் கோபத்துடன்.சேவகன், இறைவனின் கால்களில் விழுந்து தன் தவறுக்கு மன்னிக்க வேண்டினான்.

“இப்போது புரிந்துகொள். நான் செய்யும் அனைத்திற்க்கும் காரணம் இருக்கும். அது ஒவ்வொன்றையும் மனிதர்களால் புரிந்துகொள்ளமுடியாது. அவர்களின் நலம் வேண்டியே நான் ஒவ்வொருப் பொழுதையும் கழிக்கிறேன். அவரவரது கர்மாவின் படி பலன்களை அளிக்கிறேன். நான் கொடுப்பதிலும் கருணை இருக்கிறது. கொடுக்க மறுப்பதிலும் கருணை இருக்கிறது.” என்றான் இறைவன் புன்னகைத்தபடி.
————————————————-
நம் வாழ்வில் இப்படித் தான்… நம்மை சுற்றி நடக்கும் பல சம்பவங்களுக்கு காரணங்களை நம்மால் புரிந்துகொள்ளமுடியாது. இறைவன் ஒவ்வொன்றிலும் ஒரு காரணத்தை ஒளித்துவைத்திருப்பான். அதை கண்டுபிடிப்பதில் தான் அனைவரும் வேறு படுகின்றனர்.
எதையும் எதிர்கொள்ளும் மனோபாவத்தையும், புரிந்துகொள்ளும் பக்குவத்தையும் இறைவனிடம் எப்போதும் வேண்டுவோம். இப்போதைய தேவை அது தான்.

அதே போல நமக்கு ஏற்படும் ஒவ்வொரு சோதனையின் போதும், மனம் தளராது இறைவன் மீது முழு நம்பிக்கை வைத்து, ‘எல்லாம் நமது நன்மைக்கே’ என்ற பக்குவத்தை நாம் வளர்த்துக்கொண்டால், எப்பேர்பட்ட சோதனைகளும் சாதனைகளாகிவிடும். எந்த துரோகமும் நம்மை ஒன்றும் செய்துவிட முடியாது.

தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
ஆனால் இங்கே மாணிக்கவாசகரோ எந்நாட்டவர்க்கும் இறைவா என்றுக் கூறினாலும், இறைவனை தென்னாடுடையவன் என்று சிறப்பாகக் கூறுகின்றார். அவரின் இந்தக் கூற்று சரியான ஒன்றா?

மாணிக்கவாசகர் தமிழகத்தை சேர்ந்தவர்… அதனால் அவர் ’தென்னாடுடைய சிவனே’ என்று கூறி இருக்கின்றார்… இதுவே ஒரு வடநாட்டினைச் சேர்ந்த ஒருவர் எழுதி இருந்தால் அவர் ‘வடநாட்டினை உடைய சிவனே” என்று தான் கூறி இருப்பார். அப்படி என்றால் இறைவன் வடநாட்டினை மட்டும் சேர்ந்தவர் ஆகி விடுவாரா?… இறைவன் முழு உலகத்திற்கும் உடையவர்” என்றுக் எண்ணுகிறீர்களா

ஒருக் கருத்து உண்மையான கருத்து ஆக வேண்டும் என்றால் அது எல்லா நிலையிலிலும் நிலைத்து நிற்க வேண்டும்.எல்லா நிலைக்கும் பொருந்த வேண்டும். இப்பொழுது ‘தென்னாடுடைய’ என்னும் சொல் ‘தெற்குத் திசையில் உள்ள ஒரு நாட்டினைக்’ குறிப்பதாக இருந்தால் அந்த நாடு இடத்திற்கு இடம் மாறுபடுவதாக அமைந்து விடும்.

சீனத்திற்கு தென்னாடு வடஇந்தியா.

வடஇந்தியாவிற்கு தென்னாடு தமிழகம்.

தமிழகத்திற்கு தென்னாடு ஆப்பிரிக்கா.

இப்படியே அந்தக் கருத்து அர்த்தமில்லாத ஒருக் கருத்து ஆகி விடும். எனவே மாணிக்கவாசகர் அந்த அர்த்தத்தினில் ’தென்னாடுடைய’ என்னும் சொல்லினை பயன் படுத்தவில்லை.

மாணிக்கவாசகர் ’தென்னாடுடைய’ என்னும் சொல்லினை ‘தென்னவனின் நாட்டினைச் சிறப்பாக உடைய’ என்னும் அர்த்தத்தினில் பயன் படுத்தி இருக்கின்றார்.

‘தென்னவனின் நாடா???”

சற்று விளக்கமாகப் பார்ப்போம்.

தென்னவன் என்றச் சொல் பாண்டியனைக் குறிக்கும். பாண்டியன் என்பதின் அர்த்தம் ‘பழைய நாட்டினை ஆண்ட மன்னன்’ என்பதே ஆகும். ‘பாண்டி’ என்றால் ‘பழைய’ என்றும் தமிழில் அர்த்தம் இருக்கின்றது.

எனவே ‘தென்னாடு’ என்றால் ‘பாண்டியனால் ஆளப்பட்ட பழைய நாடே ஆகும்’. சிவன் அந்த நாட்டினில் சிறப்பாக இருக்கின்றார் என்றே மாணிக்கவாசகர் கூறுகின்றார்.

“பழைய நாடா ?” – பாண்டியன் மதுரையை அல்லவா ஆண்டான் என்று கூறுபவர்களுக்கு, இப்பொழுது இருக்கும் மதுரை மூன்றாவது மதுரை. இதற்கு முன்னர் இருந்த இரு மதுரைகள் கடற்கோள்களினால் அழிந்துப் போயின. அது வரலாறு!!! குமரிக்கண்ட வரலாறு!!! மாணிக்கவாசகர் ‘தென்னாடு’ என்றுக் குறிப்பிடுவதும் இந்த குமரிக்கண்டத்தையேதான்.

ஓம் என்பதை அ, உ, ம் என்று பிரிக்க வேண்டும்.

அதாவது அ, உ, ம் என்ற எழுத்துகளை இணைத்தால் ஓம் என்று வரும். அ என்பது படைப்பதையும், உ என்பது காப்பதையும், ம் என்பது அழிப்பதையும் குறிக்கும்.

அ என்பது முதலெழுத்து. இது வாழ்வின் ஆரம்பத்தை குறிக்கிறது.

உ என்பது உயிரெழுத்துக்களின் வரிசையில் ஐந்தாவதாக வருகிறது. மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐந்து உறுப்புகளை மனிதர்கள் அடக்கி வைத்துக் கொண்டால், ஆயுள் அதிகரிக்கும் என்பதும், ஆயுள் கூடக்கூட, மனிதர்கள் துவங்கியது தடையின்றி நடக்கும் என்பதும் தெரிந்த விஷயம்.

மேலும், உ என்பது காத்தல் எழுத்து என்பதால், இறைவன் நம்மை பாதுகாப்பதைக் குறிக்கிறது. நம் செயல்கள் தடையின்றி நடக்க வேண்டுமானால் நமக்கொரு பாதுகாப்பு வேண்டும். இதற்காகவே உ என எழுதுகிறோம்

தனிமை என்பது கொடுமை என்று பலரும் எண்ணுகின்றனர். ஆனால், உண்மையில் தனிமை ஓர் சிறந்த ஆசான். வாழ்க்கையை பற்றிய சரியான, உண்மையான பாடங்களை கற்றுக் கொடுப்பதே தனிமை தான். தனிமை ஓர் சிறந்த நண்பன். உங்கள் மீது உண்மையான அன்பு செலுத்துபவர்கள் யார், உங்களிடம் நேர்மையாக நடந்துக் கொள்பவர்கள் யார் என்பதை தனிமை தான் உணர்த்துகிறது.

நீங்கள் தனிமையில் இருக்கும் போது அல்லது தனிமையில் தள்ளப்பட்டிருக்கும் சூழலில் தான் நீங்கள் தான் உங்களது சிறந்த நண்பர் என்பதை உணர முடியும். தனிமை தான் உங்களுக்கு எதையும் கையாள முடியும், கையாள முடியாத நிலை என்று எதுவும் இல்லை என்று கற்றுக் கொடுக்கிறது.

உங்கள் மகிழ்ச்சி பிறரை சார்ந்தது அல்ல என்பதை நீங்கள் உணரும் தருவாய் தனிமை. மற்றும் உங்கள் மகிழ்ச்சி மற்றவரது கைகளில் இல்லை என்பதையும் தனிமை உங்களுக்கு கற்றுக் கொடுக்கிறது. உங்கள் வாழ்க்கை சிறக்க நீங்கள் தான் முடிவெடுக்க வேண்டும் என்பதை தனிமை மட்டுமே கற்றுக் கொடுக்கும்.

நீங்கள் விரும்பும் செயல்களை மற்றவர்களின் துணை அல்லது உதவி இன்றி நீங்களே செய்து முடிக்க முடியும் என்ற ஊக்கத்தை தனிமை தான் அளிக்கிறது. தனிமை உங்களுக்கு அளிக்கும் மிகச்சிறந்த பரிசு, அமைதி மற்றும் பொறுமை. இவை இரண்டும் உங்களை வாழ்க்கையின் அடுத்தக் கட்டத்தை அடைய உதவியாக இருக்கும். உண்மையான உறவுகளை இணைக்கும் பாலம் தான் தனிமை. இது, உங்கள் பெற்றோர், நண்பர்கள் மத்தியில் ஒன்றிணைந்து செயல்பட உதவுகிறது.

இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்
ததனை அவன்கண் விடல்.

“யாரால் இந்த வேலையை முடிக்க முடியும்?”, “அதை செய்வதற்கு அவனுக்கு வேண்டியவை இருக்கின்றதா?” என்பதை யோசித்து ஒரு அரசன் ஒரு வேலையை செய்ய ஆளை தேர்ந்தெடுக்க வேண்டும். அவனை தேர்ந்தெடுத்த பின் அந்த வேலையை அவனிடமே முழுமையை விட வேண்டும்

வெள்ளத்தனைய மலர் நீட்டம்; மாந்தர் தம் உள்ளத்தனையது உயர்வு — திருவள்ளுவர்