சிந்தனை 1

‘செல்லாத காசுக்குள்ளும் செப்பு இருக்கு’னு சொல்வாங்க. என் வாழ்க்கையில் நான் கத்துக்கிட்ட ஒரே விஷயம் இதுதாங்க. அடுத்த மனுஷனை மதிக்கணும். அவரையும் நம்மோட ஒருத்தரா நேசிக்கணும். இங்க பெரியவங்க, சின்னவங்கனு யாரும் இல்லை. எல்லாப் பெரியவங்களுக்கும் ஒரு ‘நேத்து’ இருக்கும். அதுபோல சின்னவங்களுக்கும் ஒரு ‘நாளை’ இருக்கும். எனக்கு டீ தர்றான் ஒரு பையன். அது அவர் வேலை. அவர் எங்க வீட்டுக்கு வந்தா நான்தான் அவருக்கு டீ எடுத்துட்டு வந்து தருவேன். தரணும்.

என்னைப் பொறுத்தவரைக்கும் மனுஷங்க மகான்களாவறது பெரிய விஷயம் இல்லை; மனுஷங்களாவே இருக்க முடிஞ்சா… அதுதாங்க சந்தோஷம்!”

-தேவா

சிந்தனை 2

வாழ்வதற்கான செலவு மிகவும் குறைவு…
அடுத்தவன் போல் வாழ்வதற்குத் தான் செலவு அதிகம்…!!

Comments are closed.