இதைப் படிக்க ஆரம்பிக்கும் முன் இது எல்லா “ஃபாஸ்ட்ஃபுட்” கோயில்களுக்கும் பொருந்தாது என்பதை கவனத்தில்கொள்ள வேண்டும். எல்லா லட்சணங்களையும் கொண்டிருக்கும் கோயில்களுக்கு மட்டும் தான் இது. பழங்காலத்துக் கோயில்களில் எல்லாம் இது 100% சதவிகிதம் உள்ளது.

எப்படி எனறு கேட்பவர்களுக்கு கொஞ்சம் விளக்கமாகச் சொல்கிறேன்.:

பூமியின் காந்த அலைகள் அதிகம் வீசப்படும் இடங்கள்தான் இந்தக் கோயில்களின் சரியான அமைவு. இது பொதுவாக ஊருக்கு ஒதுக்குப்புறமான இடங்கள், மலைகள் மற்றும் ஆழ்ந்த இடங்கள் தான் உகந்த இடங்கள்.

கோயில்களில் ஒரு அபரிதமான காந்த சக்தியும், பாஸிட்டிவ் எனர்ஜியும் அதிகம் கொண்டிருக்கும். இது நார்த் போல் சவுத் போல் திரஸ்ட் வகை ஆகும். முக்கிய சிலைதான் இந்த மையப்பகுதியில் வீற்றீருக்கும். அதை நாம் கர்ப்பகிரகம் அல்லது மூலஸ்தானம் என கூறுவோம்.

இந்த மூலஸ்தானம் இருக்கும் இடம் தான் அந்தச் சுற்று வட்டாரத்திலேயே காந்த மற்றும் பாஸிட்டிவ் எனர்ஜி அதிகம் காணப்படும். பொதுவாக இந்த மூலஸ்தானம் சுயம்பாக உருவாகும் அல்லது அங்கே கிடைக்கப் பெறும் சிலை அப்புறம் தான் கோயில் உருவாகும்.

நிறையக் கோயில்களின் கீழே அதுவும் இந்தக் கர்ப்பகிரகத்தின் கீழே சில செப்புத் தகடுகள் பதிக்கபட்டிருக்கும் அது எதற்கு தெரியுமா? அது தான் கீழே இருக்கும் அந்த சக்தியை அப்படி பன்மடங்காக்கி வெளிக் கொணரும்.

அதுபோக எல்லா மூலஸ்தானமும் மூன்று பக்கம் மூடி வாசல் மட்டும் தான் திறந்து இருக்கும் அளவுக்குக் கதவுகள் இருக்கும். இது அந்த சக்தியை விரயம் செய்யாமல் ஒரு வழியாக அதுவும் வாசலில் இடது மற்றும் வலது புறத்தில் இருந்து இறைவனை வணங்கும் ஆட்களுக்கு இந்தச் சக்தி கிடைக்கும்.

இது உடனே தெரியாமல் இருக்கும் ஒரு சக்தி வழக்கமாக கோயிலுக்குச் செல்லும் ஆட்களுக்குத் தெரியும் ஒருவித இனம்புரியாத சக்தி அந்தக் கோயிலில் கிடைக்கும் என்று.

அது போக கோயிலின் பிரகாரத்தை இடமிருந்து வலமாய் வரும் காரணம் சக்திச்சுற்றுப் பாதை இது தான். அதனால் தான் மூலஸ்தானத்தை சுற்றும் போது அப்படியே சக்திச் சுற்றுப்பாதை கூடச் சேர்ந்து அப்படியே உங்கள் உடம்பிலும் மனதிலும் சக்தி/ வலு வந்து சேரும். இந்தக் காந்த மற்றும் ஒருவித பாசிட்டிவ் மின்சார சக்தி நமது உடம்புக்கும் மனதிற்கும் ஏன் மூளைக்கும் தேவையான ஒரு பிரபஞ்ச சக்தி (பாஸிட்டிவ் காஸ்மிக் எனர்ஜி) ஆகும்.

மூலஸ்தானத்தில் ஒரு விளக்கு கண்டிப்பாய் தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கும். அது போக அந்த விக்கிரகத்திற்க்கு பின் ஒரு விளக்கு (இப்போது நிறைய கோயில்களில் பல்புதான்) அதைச் சுற்றிக் கண்ணாடி அது செயற்கை ஒளிவட்டம் வருவதற்க்கு அல்ல. அது அந்தச் சக்தியை அப்படித் திருப்பும் ஒரு உக்தியாகும்.

அது போக மந்திரம் சொல்லும் போதும், மணியடிக்கும் போதும் அங்கே செய்யபடும் அபிஷேகம் அந்த சக்தியை மென்மேலும் கூட்டி ஒரு கலவையாய் வரும் ஒரு அபரிதமான “எனர்ஜி ஃபேக்டரிதான்” மூலஸ்தானம்.

இவ்வளவு அபிஷேகம், கர்ப்பூர எரிப்பு, தொடர் விளக்கு எரிதல் இதை ஒரு அறையில் நீங்கள் செய்து பாருங்கள். இரண்டே நாளில் அந்த இடம் சாக்கடை நாற்றம் எடுக்கும். ஆனால் கோயிலில் உள்ள இந்தக் கர்ப்பக்கிரகம் மற்றும் எத்தனை வருடம் பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், சந்தனம், குங்குமம், விபூதி மற்றும் எண்ணெய், சீயக்காய் போன்ற எவ்வளவு விஷயங்களை கொன்டு அபிஷேகம் செய்தாலும் இந்த இடம் நாற்றம் என்ற விஷயம் வரவே வராது.

அது போகக் கடைசியில் செய்யும் சொர்ணாபிஷேகம் இந்த சக்தியை ஒவ்வொரு நாளும் கூட்டிக்கொண்டே செல்லும். பூக்கள், கர்ப்பூரம் (பென்ஸாயின் கெமிக்கல்), துளசி (புனித பேஸில்), குங்குமப்பூ (சேஃப்ரான்),கிராம்பு (கிளவ்) இதை சேர்த்து அங்கு காப்பர் செம்பில் வைக்கபட்டு கொடுக்கும் தீர்த்தம் ஒரு அபரித சுவை மற்றும் அதன் சுவை கோயிலில் உள்ளது போல் எங்கும் கிடைக்காது.

இதை ஒரு சொட்டு அருந்தினால் கூட அதில் உள்ள மகிமை மிக அதிகம். இதை வழக்கமாக உட்கொண்டவர்களுக்கு இது ஒரு நோயெதிர்ப்பு “ஆன்டிபயாட்டிக்” என்றால் மிகையில்லை..

இதை மூன்று தடவை கொடுக்கும் காரணம் ஒன்று உங்கள் தலையில் தெளித்து இந்த உடம்பை புண்ணியமாக்க, மீதி இரண்டு சொட்டு உங்கள் உடம்பைப் பரிசுத்தமாக்குவதற்காகவேத் தரப்படுகின்றது..

இன்று ஆயிரம் பற்பசை அமெரிக்காவில் இருந்து வந்தாலும் ஏன் கிராம்பு, துளசி, வேம்பின் ஃபார்முலாவில் தயாரிக்கும் காரணம் இது தான் இந்த தீர்த்தம் வாய் நாற்றம், பல் சுத்தம் மற்றும் இரத்ததை சுத்தப்படுத்தும் ஒரு அபரிதமான கலவை தான் இந்தத் தீர்த்தம்.

கோயிலுக்கு முன்பெல்லாம் தினமும் சென்று வந்த இந்த மானிடர்களுக்கு எந்த வித நோயும் அண்டியது இல்லை என்பதற்கு இதுதான் காரணம்.

கோயிலின் அபிஷேகம் முடிந்து வஸ்த்திரம் சாத்தும் போது மற்றும் மஹா தீபாராதனை காட்டும் போது தான் கதவைத் திறக்கும் காரணம் அந்த சுயம்புக்கு செய்த அபிஷேக சக்தி எல்லாம் மொத்தமாக உருவெடுத்து அப்படியே அந்த ஜோதியுடன் ஒன்று சேர வரும்போது தான் கதவை அல்லது திரையைத் திறப்பார்கள். அது அப்படியே உங்களுக்கு வந்து சேரும். அது போக அந்த அபிஷேக நீரை எல்லோருக்கும் தெளிக்கும் போது உங்கள் உடம்பில் ஒரு சிலிர்ப்பு வரக் காரணமும் இது தான்.

கோயிலுக்கு மேல் சட்டை அணிந்து வர வேண்டாம் என கூறுவதற்கும் இது தான் முக்கிய காரணம். அந்த சக்தி அப்படியே மார்புக் கூட்டின் வழியே புகுந்து உங்கள் உடம்பில் சேர வேண்டும் என்பதனால்தான் நம் முன்னோர்கள் அவ்வாறு வகுத்தனர்.

பெண்களுக்கு தாலி அணியும் காரணமும் இது தான். நிறையப் பெண்களுக்கு ஆண்களை போன்று இதய நோய் வராமல் இருக்கும் காரணம் இந்த தங்க மெட்டல் இதயத்தின் வெளியே நல்ல “பாஸிட்டிவ் எனர்ஜியை” வாங்கி கொழுப்பைக் கூட கரைக்கும் சக்தி இருப்பதாக ஒரு கூடுதல் தகவல். மாங்கல்யம், கார் சாவி மற்றும் புது நகைகள் இதையெல்லாம் இங்கு வைத்து எடுத்தால் அந்த உலோகங்கள் இதன் சக்தியை அப்படியே பற்றிக் கொள்ளுமாம். இது சில பேனாக்கள் மற்றும் பத்திரிகை மற்றும் எல்லாவற்றுக்கும் பொருந்தும்.

கல்சிலையின் முன் வைத்து எடுப்பதனால் என்ன பலனென கேட்பவர்கள் தெரிந்து கொள்ளவேண்டியது என்னவென்றால், தொடர்ச்சியான வழிபாடுகளால் ஒருமுகப்படுத்தப்பட்ட பிரபஞ்ச சக்தியின் இருப்பிடமே அச்சிலை. அந்தச் சக்திதான் நாம் வழிபடும்போது அங்கிருந்து நம்மில் படும். பல மைல் தூரத்தில் இருந்து பயணம் செய்திருப்பினும் அந்த சில நொடிகளில் தரிசனம் கிட்டும்போது அந்த உடம்பில் ஒரு மென்மையான சிலிர்ப்பும், ஒரு வித நிம்மதியும் ஒரு சக்தி வந்து மிச்சம் உள்ள எவ்வளவு பெரிய பிரகாரத்தையும் சுற்றி வரும் ஒரு “எனர்ஜு ரீசார்ஜ் பாயின்ட் தான்” இந்தக் கோயிலின் மூலஸ்தானம்.

அது போக கோயிலின் கொடி மரத்திற்க்கும் இந்தப் பரிகாரத்திற்க்கும் ஒரு நேரடி “வயர்லெஸ்” தொடர்பு உண்டென்றால் அது மிகையாகாது.

கோயில் மேல் இருக்கும் கலசம் சில சமயம் இரிடியமாக மாற இது தான் காரணம். கீழ் இருந்து கிளம்பும் காந்த அலைகள் (மேக்னெட்டிக் வேவ்ஸ்) மற்றும் இடியின் தாக்கம் தான் ஒரு சாதாரண கலசத்தையும் இரிடியமாக மாற்றும் திறன் படைத்தது. கோயில்களில் இடி தாக்கும் அபாயம் இல்லாமல் போன காரணம் கோயில் கோபுரத்தில் உள்ள இந்தக் கலசங்கள் ஒரு சிறந்த மின்கடத்தி. ஆம்! இது தான் பிற்காலத்தில் கண்டெடுக்கப்பட்ட “லைட்னிங் அரெஸ்டர்ஸ்”.

அது போக கொடி மரம் இன்னொரு இடிதாங்கி மற்றும் இது தான் கோயிலின் வெளிப்பிரகாரத்தை காக்கும் இன்னொரு காப்பரண் (டெக்னிக்கல் புரட்டக்டர்). கோயில் கதவு என்றுமே மரத்தில் செய்யபட்டது ஏனென்றால் எல்லா “ஹை வோல்ட்டேஜெயும் நியூட்ர்ல்” செய்யும் ஆற்றல் இம்மரங்களுக்கு உண்டு..

இடி இறங்கினால் கோயிலின் கதவுகளில் உள்ள மணி கண்டிப்பாக அதிர்ந்து ஒருவித ஒலியை ஏற்படுத்தும் .நல்ல மானிடர் இருவேளை கோயிலுக்கு சென்று வந்தால் மனிதனின் உடல் மட்டுமல்ல அவனின் மனதும் மூளையும் சுத்தமாகும். இவ்வாறான கோயில் சுத்த சுவாதீனம் இல்லாதவர்களை கூட இந்தச் சக்தி ஒரு மாற்றத்தை அவர்களுள் ஏற்படுத்துவதனாலேயே கோயில்களில் இவர்கள் அமைதியாகின்றனர்.

கோயிலின் மடப்பள்ளியில் கிடைக்கும் புளியோதரை ஆகட்டும், சர்க்கரைப் பொங்கலாகட்டும் இந்த டேஸ்ட்டை எந்த ஒரு ஃபைவ் ஸ்டார் கிச்சனும் கொடுத்துவிட முடியாது என்பது தான் நியதி. சில கோயில்களில் இரண்டு அல்லது நாலு வாசல் இருக்கும் காரணம் இந்தச் சக்தி அப்படியே உங்களுடன் வெளியே செல்ல வேண்டும் எனற மூத்தோர்கள் நமக்கு வகுத்த சூத்திரம் தான் இந்தக் கோயில் “டெக்னாலஜி”

அறுகம்புல்லை உண்ணுகின்ற பசுமாட்டின் சாணத்தை எடுத்து உருண்டையாக்கி வெயிலில் காயவைக்க வேண்டும். பின் இதனை உமியினால் மூடி புடம் போட்டு எடுக்க வேண்டும். இப்போது இந்த உருண்டைகள் வெந்து நீறாகி இருக்கும். இதுவே உண்மையான திருநீறாகும்.
இது நல்ல அதிர்வுகளை மட்டும் உள்வாங்கும் திறன் கொண்டது. எம்மைச் சுற்றி அதிர்வுகள் இருக்கின்றன என்பது யாவரும் அறிந்ததே.

எம்மை அறியாமலே அதிர்வுகளின் மத்தியில்த் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். எமது உடலானது இவ் அதிர்வுகளை ஏற்றுக் கொள்ளுகின்றது. திருநீறானது நல்ல அதிர்வுகளை ஏற்றுக் கொள்ளும் தன்மை வாய்ந்தது. அந்தவகையில் உடலின் முக்கிய பாகங்களில் திருநீறு இட்டுக் கொள்ளும் வழக்கம் இந்துமதத்தவர்களிடம் காணப்படுகின்றது.

இதைவிட மனித உடலிலே நெற்றி முக்கிய பாகமாகக் கருதப்படுகின்றது. அந்த நெற்றியிலேயே வெப்பம் அதிகமாகவும் வெளியிடப்படுகின்றது, உள் இழுக்வும்படுகின்றது. சூரியக்கதிர்களின் சக்தியை இழுத்து சரியான முறையில் உள்ளனுப்பும் அற்புதமான தொழிலை திருநீறு செய்யும் அதனாலேயே திருநீறை நெற்றியில் இடுவார்கள்.

தனது உடலிலே சாம்பல் சத்துக் குறைந்துவிட்டால், இலங்கை போன்ற வெப்பமான நாடுகளில் வளரும் கோழி இனங்கள் சாம்பலிலே விழுந்து குளிப்பதைக் கண்டிருப்பீர்கள். புறவை இனமே தன் தேவை தெரிந்து சாம்பலை நாடுகின்றதல்லவா! அதே போல்த்தான் மனிதனும் தன் மூட்டுவலி தோற்றுவிக்கும் இடங்களில் நீர்த்தன்மையை உறிஞ்சவல்ல திருநீற்றை அணிகின்றான். பசுமாட்டுச்சாணத்தை எரித்து திருநீறு செய்கின்றார்கள். மாடு அறுகம்புல் போன்ற பலவகையான புல்வகைகளை உண்டு தனது உடலைத் தேற்றிச் சாணம் போடும். அச்சாணம் தீயிலிடப்படும் போது ஏற்படும் இரசாயண மாற்றங்கள் உடலுக்கு மருத்துவத்தன்மையைக் கொடுக்கின்றது.

இதைவிட இரு புருவங்களுக்கும் இடையிலுள்ள பகுதியில் மிக நுண்ணிய நரம்பு அதிர்வலைகளை உள்ளன. அதனால் அந்த இடத்தைப் பயன்படுத்தி மனவசியம் இலகுவாகச் செய்யமுடியும். அதனாலேயே மனவசியத்தைத் தடுக்க அந்த இடத்தில் திருநீறு, சந்தனம் போன்றவை இடப்படுகின்றன. சந்தனம் நெற்றியில் வெளியிடப்படும் வெப்பத்தை நீக்குகின்றது. அதிகமான வெப்பம் கூடிய நாடுகளில் ஞாபகங்கள் முதலில் பதியப்படல், திட்டமிடல் போன்றவற்றிற்குத் தொழிற்படுகின்ற நெற்றிப்பகுதியிலுள்ள frontal cortex என்னும் இடத்தில் அணியப்படும் சந்தனமானது வெப்பம் மிகுதியால் ஏற்படும் மூளைச்சோர்வை நீக்குகின்றது.

சந்தனம் இரு புருவங்களுக்கும் இடையில் இடுகின்ற போது, முளையின் பின்பகுதியில் ஞாபகங்கள் பதிவுசெய்து வைத்திருக்கும் Hippocampus என்னும் இடத்திற்கு ஞாபகங்களை சிறப்பான முறையில் அனுப்புவதற்கு இந்த frontal cortex சிறப்பான முறையில் தொழிற்படும். உடலுக்குக் குளிர்ச்சியூட்டும் சந்தனத்தை நெற்றியிலும் உடலின் பல பாகங்களிலும் இந்து சமயத்தவர் அணிந்திருக்கும் காட்சி நகைச்சுவையாகப் பார்வைக்குத் தோன்றினாலும் அற்புதமான காரணமும் அதில் உண்டு பார்த்தீர்களா!

நெற்றியின் இரு புருவங்களுக்கும் இடையிலுள்ள நெற்றிப் பொட்டிலே பட்டும்படாமலும் சுண்டுவிரலை நேராகப்பிடித்தால் மனதில் ஒருவகை உணர்வு தோன்றும். அந்த உணர்வை அப்படியே வைத்துத் தியானம் செய்தால் மனஒருமைப்பாடு தோன்றும், சிந்தனை தெளிவுபெறும், எதையும் தெளிவாகப் புரிந்து கொள்ளும் நிலை தோன்றும். அந்த நெற்றிப் பொட்டு குளிர்ச்சியுடன் இருக்க வேண்டாமா? இதற்குச் சந்தனம் சரியான மருந்து.

இந்த உண்மைகளைச் சாதாரணமாகக் கூறி விளங்கவைக்க முடியாத மக்களுக்கு நிலையில்லா வாழ்வின் நிலையை உணர்த்தி திருநீற்றை உடலில் அணிய வைத்திருக்கின்றார்கள். மதத்தைக் காட்டி விஞ்ஞான விளக்கத்தை மறைத்துக் கூறிய விளக்கங்களினால் மதம் வென்றது விளக்கம் மறைந்தது.

விபூதி இட்டுக் கொள்ளும் இடங்களும், பலன்களும்
1. புருவ மத்தியில்(ஆக்ஞா சக்கரம்) வாழ்வின் ஞானத்தை ஈர்த்துக் கொள்ளலாம்.

2.தொண்டைக்குழி(விசுத்தி சக்கரம்) நமது சக்தியை அதிகரித்துக் கொள்ளலாம்.

3.நெஞ்சுக்கூட்டின் மையப்பகுதி தெய்வீக அன்பைப் பெறலாம். மேலும், பூதியை எடுக்கும் போது, மோதிரவிரலால் எடுப்பது மிகவும் சிறந்தது. ஏனென்றால், நம் உடலிலேயே மிகவும் பவித்ரமான பாகம் என்று அதைச் சொல்லலாம். நம் வாழ்வையே கட்டுப்படுத்தும் சூட்சுமம் அங்கு உள்ளது.

திருநீற்றை ஒரு விரலால் தொட்டு நெற்றியில் பொட்டு போல வைத்துக்கொள்ள கூடாது. அதுபோல தண்ணீர் விட்டு குழைத்தும் பூசக் கூடாது.

நெற்றியில் ஒரு கோடிடுபவர்கள் ஆள்காட்டி விரலுக்கும் பெருவிரலுக்கும் இடையில் எவ்வளவு திருநீறு எடுக்க முடிகிறதோ அவ்வளவு எடுத்து நெற்றியில் கோடிட வேண்டும்.

மூன்று கோடு இடுவதற்கு சுண்டு விரல் தவிர்த்து மீதி நான்கு விரல்களால் திருநீரை எடுத்து, பெருவிரல் இல்லாமல் மீதி மூன்று விரலால் நெற்றி முழுவதும் கோடக அணிந்துக்கொள்ள வேண்டும்.

மேலும் தீட்சை பெற்றவர்கள் மட்டுமே திருநீரை தண்ணீர் சேர்த்து குழைத்து அணியலாம். தீட்சை பெறாதவர்கள் கண்டிப்பாக திருநீரை தண்ணீரில் குழைத்து அணிய கூடாது.

தினமும் திருநீறு அணியும் போது

“நம் தேகமும் ஒருநாள் இந்த பிடி சம்பலாகத்தான் ஆக போகிறது, ஆகவே இந்த உலக வாழ்வில் அதிக ஆசை கொள்ளாது, பொன் பொருள் மீது ஆசை கொள்ளாது, இறை வழிபாட்டில் மனம் ஒன்றி, ஆன்மா வளம் பெற வாழவேண்டும்.”

என்று எண்ணிக்கொள்ள வேண்டும். இதுவே சைவ மதம் போதிக்கும் சிறந்த கோட்பாடாகும்.

சைவ வழிபாடு
சைவ சமயத்தில் கடவுள் வழிபாடும் நன்கு வரையறுக்கப்பட்டுள்ளன.வாழ்ந்தே ஆக வேண்டும் என்ற நியதிக்கு உட்பட்ட நமது விதிகள் மூன்று மூலங்களைக் கொண்டு அமைக்கப்படுவது.

  1. பதி (கடவுள்)
  2. பசு (உயிர்)
  3. பாசம் (பற்று)

இவற்றில் பதிக்கு பாசத்தால் ஆக வேண்டியது ஒன்றும் இல்லை.அதுபோல பாசம் பதியை தொழுது பயன்களை பெற்றுக்கொள்ள முடியாது

இவை இரண்டிற்கும் இடைப்பட்ட பசுவே இவை இரண்டிற்கும் உள்ள தொடர்பு

அதாவது பசுவாகிய உயிர் பாசமாகிய பற்றில் இருந்து விடுபட்டு பதியாகிய கடவுளை(சிவனை) அடைவதே வழிபாட்டின் நோக்கம்

அப்படி உயிர் கடவுளை அடையும் நிலையே “ஞானம்” எனப்படுகிறது

சைவ நெறியின் சிவ வழிபாட்டின் நோக்கம் ஞானத்தை பெறுவதே

“பாசமாம் பற்றறுத்து பாரிக்கும் ஆரியனே” என்ற சிவ புராணத்தின் வரிகள் சிவ வழிபாட்டின் நோக்கத்தை நமக்கு விளக்குகின்றது

எனவே இந்த உலக இன்பதுன்ப உறவுகளில் இருந்து நம்மை விடுவித்து கொண்டு சிவ வழிபாட்டின் மூலம் சிவ கதி அடையவே நாம் முயல வேண்டும்….

பிரதோஷம்: அனைத்து தோஷங்களும் ஒடுங்கும் காலம் என்று பொருள்.

தேய்பிறை திரயோதசி சனிக்கிழமை ஆகியவை கூடியிருந்தால் மகாபிரதோஷம்.சாதாரண பிரதோஷ வழிபாடு தரும் பலன்கள் போன்று ஆயிரம் மடங்கு பலன் தரக்கூடியது இந்த மகாபிரதோஷம்.

தினமும் மாலை 4.30 முதல் 6 மணி வரையிலான ஒன்றரை மணி நேரம் பிரதோஷ காலமாகும்.

இந்த நேரத்தில் சிவபெருமானை தரிசிப்பது மிக விசேஷமானது.

பதினொரு பிரதோஷங்கள் தரிசனம் செய்தல் ஒரு முழு கும்பாபிஷேகத்தை தரிசனம் செய்த பலன் கிடைக்கும். பாவமே செய்து கொண்டு பிரதோஷம் செய்வதால் ஒரு புண்ணியமில்லை.

பிரதோஷ நேரம் சூரிய அஸ்தமனத்துக்கு முன்னும் பின்னும் ஒன் அரை (1-1/2) மணி நேரம் மணிநேரம்.

ஈஸ்வரனையும், சனிஸ்வரனையும் அன்று விரதமிருந்து வழிபடுவதால் சனி பிரதோஷத்துக்கு கூடுதல் சிறப்பு கிடைத்துள்ளது.

சிவபெருமான் தேவர்களை காப்பாற்ற ஆலகால நஞ்சை உண்ட நாள் சனிக்கிழமை.

எனவே, பிரதோஷ நேரம் சனிக்கிழமை அன்று வரும் சனி பிரதோஷம் என சிறப்பு பெறுகிறது